சிங்கப்பூரில் சீக்கியர்கள் – சொல்லப்படாத கதை

சத் ஸ்ரீ அகல்! சிங்கப்பூரின் சீக்கிய சமூகத்தினரும் இந்திய மரபுடைமை நிலையமும் இணைந்து உருவாக்கிய இக்காண்காட்சி மூன்று பாகங்களில் வழங்கப்படும். – பின்புலங்கள் - சிங்கப்பூரின் சீக்கிய சமூகத்தின் தோற்றத்தின் கதையைச் சொல்கிறது; குடியேற்றம் - சிங்கப்பூருக்குக் குடியேறிய சீக்கியர்களின் சில முன்மாதிரியான கதைகளை வழங்குகிறது. சமகால கண்ணோட்டம் - இன்றைய சீக்கியர்களின் அனுபவங்களைப் பற்றிய ஒரு பார்வை.