பினாங்கில் சிறிய கைச்சீட்டுகள் அச்சிடுவதற்குப் பயன்பட்ட மோட்டார் பொருத்தப்பட்ட அச்சு இயந்திரம் இது.
சிங்கப்பூரிலும் வட்டார நாடுகளிலும் 1930களில் தலையெடுத்த தமிழ் அச்சு கலாசாரத்தை இந்த அச்சு இயந்திரம் பிரதிநிதிக்கிறது. இந்தியச் சமூகத்தின் கலாசார அடையாளம் உருவாவதற்கு இது பங்களித்தது. சஞ்சிகைகள் மற்றும் தமிழகம் (1922ல் வெளியிடப்பட்டது) போன்ற மற்ற அச்சுப்பதிப்பு ஊடகங்களின் விநியோகிப்பால் சிங்கப்பூர்வாழ் தமிழர்களிடையில் இன தேசியவாத விழிப்புணர்வு பரவியது. தமிழ் நேசன், தமிழ் முரசு, முன்னேற்றம், சீர்திருத்தம் போன்ற தமிழ்ச் செய்தித்தாட்கள் சமூக-அரசியல் சார்ந்த தலையங்கங்களை வெளியிட்டு சீர்திருத்தங்களைத் தூண்டின.
இந்த அச்சு இயந்திரம் இரண்டாம் உலகப் போரின்போது முக்கிய கருவியாகவும் பயன்பட்டது. இந்திய தேசியவாத இயக்கங்களையும் இந்திய தேசிய ராணுவ நடவடிக்கைகளையும் பற்றி இந்தியச் சமூகத்திற்குத் தகவலளிக்க இந்தியச் சுதந்திர லீக் பற்பல வெளியீடுகளைத் தயாரித்து விநியோகித்தது. இவை ஆங்கிலத்திலும் மற்ற வட்டார இந்திய மொழிகளிலும் வெளியிடப்பட்டன.
ஷிரின் மற்றும் ருஸ்டம் காடியாலி இரவலாகக் கொடுத்தது
செஸ் அல்லது செஸ் சொபாரோ என்பது பார்சி (இந்திய சோராஷ்ட்ரியர்) குடும்பச் சடங்குகள், திருமணங்கள் அனைத்திலும் இடம்பெறும் வெள்ளிக்கலன்களாகும். திருமணங்கள், நிச்சயதார்த்தங்கள், ஏற்புச்சடங்குகள், ஆண்டு நிறைவு கொண்டாட்டங்கள் ஆகியவற்றின் ஆசீர்வாதச் சடங்கில் இந்த வெள்ளிக்கலன்கள் கண்டிப்பாக இருக்கும். இதனை வழிபாட்டு மேசைமீது வைப்பது வழக்கம்.
அடிப்படை செஸ் தொகுப்பில் ஒரு சொபாரோ (கூம்பு), கொலப்தானி (தெளிப்பான்), மூடியுள்ள சிறிய பிகானி (குவளை), தீபத்திற்கான தடுப்பணை இருக்கும். பழங்கள், கடலைகள், மிட்டாய்கள் வழங்குவதற்கும் கலன்கள் வைக்கப்பட்டிருக்கும். பார்சி சமூகத்தினர் செழிப்பின் சின்னமாகவும் புனிதமாகவும் கருதும் வெள்ளி மீனும் இருக்கும்.
காத்தாயி காமாட்சி அம்மாள் இரவலாகக் கொடுத்தது
இந்தியச் சமூகம் போற்றிப்பெணும் கருவிகளில் ஒன்று அம்மிக்கல். பெரிய கற்பாளமும் சிறிய உருளைவடிவக் கல்லும் கொண்ட அம்மிக்கல், பல்வேறு உணவுப் பொருட்களை அரைப்பதற்கும் இடிப்பதற்கும் பயன்படுகிறது.
தலைமுறை தலைமுறையாகப் பயன்படும் அம்மிக்கல்லில், தானியங்கள், சுவைப்பொருட்கள், மூலிகைகள் போன்றவை பொடியாக, சாந்தாக அல்லது கொரகொரப்பாக அரைக்கப்படும். இந்தியச் சமையல்கலையின் முக்கிய அங்கமான அம்மிக்கல், உணவு வகைகளில் தனித்துவமான சுவை சேர்க்கிறது. மூதாதையரின் பாரம்பரியங்களுடன் நமக்கிருக்கும் தொடர்பையும் அம்மிக்கல் பிரதிநிதிக்கிறது. கலாசார அடையாளத்தைத் தொடர்ந்து பாதுகாக்கும் உணர்வையும் தருகிறது. பாரம்பரிய உணவுத் தயாரிப்பு முறைகளின் முக்கியத்துவத்தை அம்மிக்கல்லின் பயன்பாடு எடுத்துக்காட்டுகிறது. அதோடு, இந்தியச் சமையல்கலையில் புதைந்திருக்கும் வளமான மரபுடைமையையும் நினைவூட்டுகிறது.