Government agencies communicate via .gov.sg websites (e.g. go.gov.sg/open). Trusted websites
Look for a lock () or https:// as an added precaution. Share sensitive information only on official, secure websites.
“சோழமண்டலம் முதல் மலாக்கா நீரிணை வரை - நம் தமிழ் மரபு குறித்த மறுபார்வை” கண்காட்சி, பண்டைக்காலத்திலிருந்து நிகழ்காலம் வரை தென்கிழக்காசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் அனுபவங்களைத் தொகுத்தளிக்கிறது.
இந்தியப் பெருங்கடலோரமும் தூரக் கிழக்கும் சந்திக்குமிடத்தில் அமைந்திருக்கும் மலாய் தீபகற்பம், பல கலாசாரங்களின் சங்கமமும் பன்மயமும் ஒருமிக்கும் வட்டாரமாக இருந்து வந்துள்ளது. இவ்வட்டாரத்தில் குடியேறிய ஏராளமான சமூகங்கள், தத்தம் சமூக-கலாசாரப் பழக்கங்களைத் தங்களுடன் எடுத்து வந்தனர். மொழி, சமயம், ஆடை அலங்காரம், சமையல்கலை முதலான பலவும் இதில் உள்ளடங்கும். இந்தப் பழக்கங்கள் காலப்போக்கில் உள்ளூர் சமுதாயத்தின் பன்மயக் கலாசாரங்களோடு ஒருங்கிணைந்து, பன்மொழிச் சூழலும் கலப்பின இயல்பும் ஒருமித்திருக்கும் சூழ்நிலை உருவானது. இதற்கான சிறந்ததோர் எடுத்துக்காட்டு செட்டி மலாக்கா.
சிறப்புக் கண்காட்சிக்கூடம்
Name
Email*